தரங்கம்பாடி.. பீச்சோரத்தில் டேனிஷ் கோட்டை.. ஆச்சரியத்தை கிளப்பும் மயிலாடுதுறை.. அதென்ன ஓசோன் காற்று
சென்னை: தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றுதான் தரங்கம்பாடி.. இது ஒரு சிறிய கடற்கரை நகரமாகும்.. இந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், 14ம் நூற்றாண்டிற்கு சென்று அறிய வேண்டி உள்ளது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது தரங்கம்பாடி.. கி.பி 1620-ம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர்.

2 வருடத்திலேயே அதாவது, கி.பி. 1622-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டதுதான் அந்த பிரமாண்ட கோட்டை.. இதுதான், இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்தது.
அருங்காட்சியகம்: 400 வருடங்கள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த டேனிஷ் கோட்டை.. இந்த கோட்டையில் செயல்படும் அருங்காட்சியகத்தில், 14,15,16ம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், 1200-ம் ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் போட்டோக்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்க்கருவிகள், 16ம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை, அப்படியே பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தரங்கம்பாடி: எனவேதான், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், இந்த டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரைப்பகுதியில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடற்கரையில் குளித்து விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர். இதைத்தவிர, ஸ்ரீ முருகன் கோயில், புதிய மாசிலாமணி ஈஸ்வரன் கோயில், போன்றவை இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இன்னொரு ஸ்பெஷலாட்டியும் இங்கு உள்ளது.. இங்கே அபூர்வ காற்றான ஓசோன் காற்று காலை, மாலை என வந்து செல்கிறது.. தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிக அளவில் வீசுகிறது. உடல் நலத்துக்கு நன்மையளிக்கக் கூடிய ஓசோன் காற்றை சுவாசிப்பதற்காக இப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஓசோன் நன்மை: ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டியும் கடந்த வாரம் இங்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது கோடை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வதால் தரங்கம்பாடி கடற்கரை களை கட்டியுள்ளது. இதனால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் தரங்கம்பாடி கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்..!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications