சென்னை டூ இந்தோனேசியா.. தம்பதிக்கு எமனாகிய தேனிலவு .. சுற்றுலா நிறுவனத்திற்கு 1.60 கோடி அபராதம்
சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீா்குப்பத்தை சோ்ந்த விபூஷ்னியா என்ற பெண்ணுக்ககும் லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. டாக்டர் தம்பதியான இவர்கள், தேனிலவுக்காக இந்தோனேசியா சென்றனா். இந்தோனேசியா கடலில் படகில் சென்ற அவர்கள் 'போட்டோ ஷூட்' நடத்தியுள்ளனர். எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்ததால் கடல் இருவருக்கும் எமனாக மாறியது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சுற்றுலா நிறுவனத்திற்கு 1.60 கோடி அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இளம் தலைமுறையினர் பலர் இன்றைக்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக ஹனிமூனுக்கு வெளிநாடு செல்வதை இங்கு பல பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்புகிறார்கள் . சற்று வசதி உள்ளவர்கள் கொடைக்கானல், ஊட்டி, சிம்லா, அந்தமான், கோவா என்று இந்தியாவிற்குள் சுற்றுலா செல்கிறார்கள்.

அதேநேரம் சிலர் மாலத்தீவு, இந்தோனேஷியா, தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் போன்ற பல்வேறு நாடுகளுக்கு பறக்கிறார்கள். இப்படி சுற்றுலா செல்வோரை அழைத்து செல்லவே ஏராளமான சுற்றுலா நிறுவனங்கள் உள்ளன. பேக்கேஜ் அதற்கு உள்ளன. அதில் பலரும் விரும்பி பயணிக்கிறார்கள். அதேநேரம் சுற்றுலா செல்லும் இடத்தில் எதிர்பாராத சம்பவங்களும் நடக்கின்றன. அப்படித்தான் இந்தோனேஷியாவில் சென்னை தம்பதிக்கு நடந்துள்ளது.
இந்தோனேஷியா சுற்றுலா
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீா்குப்பத்தை சோ்ந்தவா் திருஞானசெல்வம் என்பவரின் மகள் விபூஷ்னியாவிற்கும் , லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் இருவமே டாக்டர்கள். இந்த டாக்டர் தம்பதி தேனிலவுக்காக இந்தோனேசியா சென்றனா். இந்தோனேசியா கடலில் படகில் சென்ற அவர்கள் 'போட்டோ ஷூட்' நடத்தியிருக்கிறார்கள். கடல் அலை காரணமாக நிலை தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தந்தை வழக்கு
டாக்டர் தம்பதியை தேனிலவு அழைத்து சென்ற சுற்றுலா நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதலால் விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விபத்து நடந்ததாக கூறி டாக்டர் விபூஷ்னியாவின் தந்தை திருஞானசெல்வம் வக்கீல்கள் காசிராஜன், அஜித்குமார் ஆகியோர் மூலம் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுற்றுலா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
ஒரு கோடி சம்பாதித்த தேனி பெண்.. திருப்பூரில் ஒரு வருடம் கழித்து நடந்த ட்விஸ்ட்.. நடந்தது என்ன?
சுற்றுலா நிறுவனத்தின் தவறு
டாக்டர் விபூஷ்னியாவின் தந்தை திருஞானசெல்வம் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், 'எனது மகள், மருமகன் உயிரிழந்த கடல் பகுதியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்திருக்கிகறது. சுற்றுலா நிறுவனம் இதை கருத்தில் கொள்ளாமல் அங்கு அழைத்து சென்றுள்ளது. சுற்றுலா நிறுவனத்தின் அஜாக்கிரதை மற்றும் தவறான வழிகாட்டுதலால் தான் இருவரும் உயிரிழக்க நேரிட்டிருக்கிறது. எனவே, சுற்றுலா நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
ஒன்றரை கோடி இழப்பீடு
இந்த மனுவிற்கு தெற்கு மாவட்ட நுகர்வோர் மீதான விசாரணையின்போது சுற்றுலா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சுற்றுலா நிறுவனத்தின் எச்சரிக்கையை பின்பற்ற தவறியதுதான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். இந்த விபத்துக்கு சுற்றுலா நிறுவனம் பொறுப்பேற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, 'சேவை குறைபாட்டுக்காக ரூ.1½ கோடியும், மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்தை மனுதாரருக்கு சுற்றுலா நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications