Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் டூர் போறீங்களா.. குணா குகை, பைன் காடுகள் போனால் இது முக்கியம்! வனத்துறை முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருகின்றது என்பதால் கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் நிலையில் அங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் பகுதிகளுக்கு செல்பவர்கள் இனி கூகுள் பே, போன் பேவில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை பார்க்க முடியும். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கோடைவாசஸ்தலங்களில் ஒன்றாக இருக்க கூடிய கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

Kodaikanal Tourists Alerted Forest Department to Collect Entry Fees Only Through Online Mode

கொடைக்கானல்

கோடை காலங்களில் மட்டும் இன்றி குளிர் காலத்திலும் அங்குள்ள ரம்மியமான இயற்கை சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது இன்று விடுமுறை தினம் என்பதால் வார நாட்களை விட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகம் இங்கு வருவதை பார்க்க முடிகிறது.

கட்டணம் செலுத்த வேண்டும்

கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மறக்காமல் பார்க்க கூடிய இடங்களாக குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்டவையும் உள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், அங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்பிறகு செல்லும் டூரிஸ்ட்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை. அதேபோல, ஒவ்வொரு சுற்றுலா இடங்களுக்கும் தனித்தனியே கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நுழைவு வாயிலில் எத்தனை பேர் என்ற விவரங்களை சொல்லி கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் நிலை இருந்தது.

ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம்

கடந்த செப்டம்பர் மாதம் இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருந்தது. ஒரே இடத்தில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதியை வனத்துறை கொண்டு வந்தது. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வனத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை முதல் வனத்துறை கட்டுப்பாடில் உள்ள இடங்களுக்கு இனி நுழைவு கட்டணம் ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

கூகுள் பே, போன் பே போன்றவற்றின் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் ரொக்கமாக கட்டணம் செலுத்த இயலாது என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ள்னார். பொங்கல் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பொங்கல் விடுமுறைக்க்கு முன்பாக இந்த அறிவிப்பை வனத்துறை வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்றால் சில நேரங்களில் பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது என்பதால், முந்தைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருந்தால் சுற்றுலாப்பயணிகள் பரிதவிக்க வேண்டிய நிலை இருக்காது என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+