ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா.. ஹேப்பி நியூஸ் உங்களுக்குதான்! டால்பின் நோஸ் இன்று திறப்பு
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தளங்களின் ஒன்றான, டால்பின் நோஸ் இன்று திறக்கப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் இதை கண்டுகளிக்கலாம். இது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
குன்னூரில் இருந்து வெறும் 12 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இது ஒரு வியூ பாயிண்ட். இங்கிருந்து பார்த்தார் கேத்ரின் நீர்வீழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியும்.

இந்த இடம் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிகவும் உயரமான இடம் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள், சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ள ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த செப். 12ம் தேதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இங்குள்ள பகுதியில் நடைபாதை பராமரிப்பு, கழிப்பிடம், தடுப்பு வேலிகள் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்றன.
இங்கிருந்து பார்க்கும்போது மலைகளுக்கு நடுவே, மிக உயரத்திலிருந்து கொட்டும் கேத்தரின் நீர் வீழ்ச்சியை பார்க்க முடியும். அதேபோல, கோத்தகிரி மலை தொடரையும், பசுமையான தேயிலை சமவெளி பகுதிகளையும் பார்த்து ரசிக்க முடியும். தெளிவான வானிலை இருக்கும் நாட்டிகளில் பவானி ஆறு ஓடுவதையும் பார்க்க முடியும்.
குன்னூரிலிருந்து டால்பின் நோஸ் செல்லும் பகுதியே மிகவும் ரம்மியமாக இருக்கும். இரு பகுதிகளிலும் அடர்ந்த தேயிலை தோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும். தற்போது ஊட்டியில் உறை பனி நிலவி வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்துள்ளனர். அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டால்பின் நோஸ் காட்சி முனை புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
டால்பின் நோஸ் பகுதிக்கு பக்கத்தில் லேம் ராக் எனும் மற்றொரு சுற்றுலா தளமும் இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் கோயம்புத்தூர் சமவெளி மற்றும் நீலகிரி மலைகள் பிரமாண்டமாக தெரியும். இங்குள்ள பாறைகள் ஆட்டுக்குட்டி வடிவத்தில் இருப்பதால், லேம்ப் ராக் என பெயர் வந்திருக்கிறது. அதேபோல டால்பின் நோஸ் செல்லும் வழியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. இங்கு தேயிலை தூள் தயாரிப்பதை பார்க்க முடியும்.
அதேபோல இங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், சிம்ஸ் பார்க் அமைந்திருக்கிறது. இங்கு பல வகையான அரிய மரங்கள், செடிகள் மற்றும் மலர்களை பார்க்க முடியும். அதேபோல இங்கிருந்து 12 கி.மீ தொலைவில் லாவ்ஸ் நீர்வீழ்ச்சியும் அமைந்திருக்கிறது.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
திமுக அரசு மாநில உரிமையை விட்டுக்கொடுத்து தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? டிடிவி தினகரன் கேள்வி -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி












Click it and Unblock the Notifications