ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா.. ஹேப்பி நியூஸ் உங்களுக்குதான்! டால்பின் நோஸ் இன்று திறப்பு
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தளங்களின் ஒன்றான, டால்பின் நோஸ் இன்று திறக்கப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் இதை கண்டுகளிக்கலாம். இது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
குன்னூரில் இருந்து வெறும் 12 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இது ஒரு வியூ பாயிண்ட். இங்கிருந்து பார்த்தார் கேத்ரின் நீர்வீழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியும்.

இந்த இடம் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிகவும் உயரமான இடம் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள், சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ள ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த செப். 12ம் தேதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இங்குள்ள பகுதியில் நடைபாதை பராமரிப்பு, கழிப்பிடம், தடுப்பு வேலிகள் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்றன.
இங்கிருந்து பார்க்கும்போது மலைகளுக்கு நடுவே, மிக உயரத்திலிருந்து கொட்டும் கேத்தரின் நீர் வீழ்ச்சியை பார்க்க முடியும். அதேபோல, கோத்தகிரி மலை தொடரையும், பசுமையான தேயிலை சமவெளி பகுதிகளையும் பார்த்து ரசிக்க முடியும். தெளிவான வானிலை இருக்கும் நாட்டிகளில் பவானி ஆறு ஓடுவதையும் பார்க்க முடியும்.
குன்னூரிலிருந்து டால்பின் நோஸ் செல்லும் பகுதியே மிகவும் ரம்மியமாக இருக்கும். இரு பகுதிகளிலும் அடர்ந்த தேயிலை தோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும். தற்போது ஊட்டியில் உறை பனி நிலவி வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்துள்ளனர். அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டால்பின் நோஸ் காட்சி முனை புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
டால்பின் நோஸ் பகுதிக்கு பக்கத்தில் லேம் ராக் எனும் மற்றொரு சுற்றுலா தளமும் இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் கோயம்புத்தூர் சமவெளி மற்றும் நீலகிரி மலைகள் பிரமாண்டமாக தெரியும். இங்குள்ள பாறைகள் ஆட்டுக்குட்டி வடிவத்தில் இருப்பதால், லேம்ப் ராக் என பெயர் வந்திருக்கிறது. அதேபோல டால்பின் நோஸ் செல்லும் வழியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. இங்கு தேயிலை தூள் தயாரிப்பதை பார்க்க முடியும்.
அதேபோல இங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், சிம்ஸ் பார்க் அமைந்திருக்கிறது. இங்கு பல வகையான அரிய மரங்கள், செடிகள் மற்றும் மலர்களை பார்க்க முடியும். அதேபோல இங்கிருந்து 12 கி.மீ தொலைவில் லாவ்ஸ் நீர்வீழ்ச்சியும் அமைந்திருக்கிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications