கையில் பணம் இல்லை.. சுற்றுலா செல்ல உதவுங்க.. அண்ணா சாலையில் நின்ற வெளிநாட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
சென்னை: "நாங்கள் பணமே இல்லாமல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம்..தயவு செய்து எங்கள் பயணித்திற்கு ஆதரவளியுங்கள்" என்ற பாதகையுடன் சென்னை வாலாஜா சாலை சிக்னலில் வெளிநாட்டினர் நின்றிருந்தனர். அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை சென்னைவாசிகள் ஆர்வமுடன் செய்தனர்.
விருந்தோம்பலில் தமிழ்நாடு மக்களை போல் உபரிப்பது வேறு பக்கம் இருக்கிறதா என்பது தெரியாது.. அந்த அளவிற்கு தமிழர்களின் விருந்தோம்பல் குணம் சிறப்பானது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சென்னையில் இறங்கிய உடன், சென்னையை சுற்றி பார்க்கிறார்கள். அதன்பிறகு மகாபலிபுரம் செல்கிறார்கள்.. மகாபலிபுரத்தின் சிற்பக்கலையை கண்டு வியக்கும் வெளிநாட்டவர்கள் அப்படியே போகும் இடம் புதுச்சேரி...

அதன்பிறகு திருச்சி, மதுரை, ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்கிறார்கள். வெளிநாட்டவர்கள் யார் வந்தாலும் அவர்களை வரவேற்று உபசரிப்பதில் தமிழர்களின் அன்பு அற்புதமானது. இந்நிலையில் சென்னைக்கு சுற்றுலா வந்த ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் நாங்கள் பணமே இல்லாமல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம்..தயவு செய்து எங்கள் பயணித்திற்கு ஆதரவளிக்குமாறு பாதகையை சுமந்தபடி சென்னை அண்ணா சாலை, வாலாஜா சிக்கனலில் வெளிநாட்டினர் நின்றனர்.
சுற்றுலா செல்ல உதவுமாறு கோரிக்கை வைத்து பாதகையை ஏந்தி நின்ற வெளிநாட்டவர்கள் மூன்று பேரை சென்னைவாசிகள் ஆச்சர்யத்துடன் அருகில் சென்றனர். அவர்களிடம் சாப்பிட்டீங்களா.. என்ன சாப்டீங்க.. உங்களுக்கு என்ன உதவி வேண்டும்.. இந்த பணம் போதுமா என்று பாசத்துடன் கேட்டனர். உங்களுக்கு வேண்டிய உதவிகளை இந்தியர்களிடம் கேளுங்கள்.... நிச்சயம் செய்வார்கள் என்று சென்னைவாசி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி ஊடகம் ஒன்று வெளிநாட்டவர்களை வீடியோ எடுத்ததுடன், அவர்களிடம் பேட்டி எடுத்தும் ஒளிபரப்பி உள்ளது. அந்த பேட்டியில் அவர்கள், தாங்கள் சென்னை, புதுச்சேரி, திருச்சியை சுற்றி பார்த்துவிட்டு வந்துவிட்டதாவும் அடுத்து பெங்களூர் செல்ல இருப்பதாகவும் கூறினார்கள்.. இதனிடையே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், உடனடியாக அங்கு வந்தனர். உதவி கேட்ட வெளிநாட்டவர்களை, உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதேநேரம் சென்னைவாசிகள் பலர் உதவியதால் உதவியை பெற்றுக்கொண்ட வெளிநாட்டினர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications