சேலம் ஏற்காடு சுற்றுலா தலத்தில்.. ஞாயிறுகளில் இப்படி ஒரு காட்சி.. ஏமாந்த மக்கள்
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சேலம் மாநகரில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடம் ஆகும். ஆனால் நேற்று ஞாயிறு அன்று வழக்கமான சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லை.. விடுமுறை நாளான நேற்று ஏற்காடு, சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் ஆட்டோ, கார் டிரைவர்கள், ஏற்காடு மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசம் ஆகும். ஏற்காடு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,515 மீட்டர் (4,970 அடி) உயரத்தில் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக ஏற்காட்டில் வெப்பநிலை பொதுவாக மிதமானதாகவும், இதமானதாகவும் இருக்கிறது. இது ஒரு மலைவாசஸ்தலம் என்பதால், சமவெளிப் பகுதிகளைப் போல ஏற்காட்டில் அதிக வெப்பம் இருக்காது. கோடைக்காலத்தில் வெப்பநிலை சுமார் 16°C முதல் 30°C வரை இருக்கும். ஆனால் சென்னையின் கோடை வெப்பத்துடன் ஒப்பிடும்போது மிகவும் இதமானதாக இருக்கும் . கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் போன்ற தற்போதைய கால நிலையில் வெயில் மிக குறைவாகவே இருக்கும். நல்ல குளிர் இருக்கும். இது மலைக்காலம் என்பதால் அடிக்கடி மழையும் பெய்யும். கிளைமேட்டும் அருமையாக இருக்கும். அதாவது கிளைமேட்டை பொறுத்தவரை 15 டிகிரி முதல் 25 டிகிரிக்குள் தான் இருக்கும். கோடைக்காலத்திற்கு அடுத்தபடியாக இந்த இரண்டாவது சீசனில் அதிகப்படியான மக்கள் வருவார்கள்,
தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் ஆகும். குறிப்பாக தொடர் விடுமுறை நாள்கள் மற்றும் வாரஇறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால் நேற்று ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்றி ஏற்காடு வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்காட்டில் உள்ள குகைகோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், அண்ணா பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகள் இன்ற வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் மிக குறைந்த அளவே வருகை தந்தால், குறைந்ததால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் காலியாகவே காணப்பட்டன.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கார், ஆட்டோ டிரைவர்கள் சவாரி இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்காட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏற்காடு ஏரி சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைவாவே இருந்தது. அவ்வப்போது இந்த சூழல் ஏற்படுகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications