நெல்லையில் சோடா பாட்டிலால் அரசு பஸ் டிரைவரை தாக்கிய.. பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
நெல்லை: நெல்லையில், பேருந்து மீது தாமரை சின்னத்தை ஒட்ட முயன்றபோது, அரசு பேருந்து ஓட்டுநர் தடுத்ததால், அவரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் மருதுபாண்டியன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மருதுபாண்டியன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நெல்லை டவுனில் இருந்து மணக்கொடை வீடு என்ற இடத்திற்கு அரசு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து கடந்த 12 ஆம் தேதி வழக்கம் போல் சென்று கொண்டிருந்த போது பேருந்தை மறித்த பாஜக நிர்வாகி மருதுபாண்டி, பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் பாஜக ஆதரவு தேர்தல் ஸ்டிக்கரை ஒட்ட முயன்றார்.
அரசு பேருந்தில் கட்சி தேர்தல் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனக் கூறி அதனை அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தடுக்க முயன்றார். இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தலையில் சோடா பாட்டிலால் ஆவேசமாக மருதுபாண்டி தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த அரசு பஸ் டிரைவர் சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் மருதுபாண்டி கைது செய்யப்பட்டார். லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் போய்க் கொண்டுஇருந்த போது, பாஜக நிர்வாகியான மருதுபாண்டி அரசு பேருந்து டிரைவரை பாட்டிலால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அரசு பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலில் தாக்கிய புகாரில் பாஜக பிரமுகர் மருதுபாண்டியன் நெல்லை போலீசாரால் கைது செய்யபட்டார். இந்த நிலையில், மருதுபாண்டியன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக குண்டர் சட்டத்தின் கீழ் மருதுபாண்டியன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அமைதியை சீர்குலைக்க முற்படலாம் என்பதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக நெல்லை மாநகராட்சி காவல் ஆணையர் மூர்த்தி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications