இரட்டை அர்த்த பேச்சு.. தனி அறையில் மெதுமெதுவாக நெருங்கிய தாளாளர்! அலறிய மாணவி.. தென்காசியில் ஷாக்
தென்காசி: தென்காசியில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் தனி அறையில் இரட்டை அர்த்தத்தில் பேசி பேசிய தாளாளர் மெதுமெதுவாக கிட்ட நெருங்கி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் மாணவி அலறியடித்து ஓடினார். இதையடுத்து கல்லூரி தாளாளரை போலீசார் கைது செய்த நிலையில் அந்த சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசியில் தனியாருக்கு சொந்தமான பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நர்சிங் மற்றும் அதனை சார்ந்த படிப்புகளை ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியின் தாளளராக முகமது அன்சாரி உள்ளார். இந்த கல்லூரியில் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 2ம் ஆண்டு நர்சிங் படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் முகமது அன்சாரி அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து மாணவி அங்கு சென்றுள்ளார்.
அப்போது முகமது அன்சாரியின் செயல்பாடுகள் தவறான வகையில் இருந்துள்ளது. அதாவது மாணவியிடம் அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அங்கிருந்து அவர் வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால் முகமது அன்சாரி அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
அதோடு இரட்டை அர்த்தத்தில் பேசிய முகமது அன்சாரி மெதுமெதுவாக மாணவியை நெருங்கி சென்றுள்ளார். மாணவி விலகி சென்றாலும் கூட அவர் தனது செயல்பாட்டை கைவிடவில்லை. ஒரு கட்டத்தில் மாணவியை நெருங்கி சென்று அவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து கதறியபடி வெளியே ஓடிவந்துள்ளார். மேலும் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவி தனது நேர்ந்த சம்பவம் குறித்த குடும்பத்தினரிடம் கண்ணீருடன் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அன்சாரியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications