Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. நெல்லையை சேர்ந்த 3 பேர் பலி..கேரளா திருமணத்திற்கு சென்றபோது சோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர் விபத்தில் நெல்லையை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளது. இந்த பகுதியில் உள்ள எஸ்டேட்டில் வசித்து வரும் வரும் ஒருவருக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியை சேர்ந்த சுமார் 20 பேர் வேன் ஒன்றில் மூணாறுக்கு சென்று கொண்டிருந்தனர்.

Van falls into deep valley nearTheni- 3 killed, tragedy happened when going to wedding function

இந்த வேன், கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தேனி மாவட்டம் பொடிமெட்டு என்ற இடத்தில் அருகே உள்ள தோன்றிமலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. திருமன வீட்டிற்கு சென்றதால் உற்சாகமாக வேனில் இருந்தவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு தாறுமாறாக ஓடியது.

இரவு 7 மணியளவில் இருள் சூழ்ந்த நேரத்தில் சாலையோரம் இருந்த 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனுக்குள் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினர். வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த சாந்தம்பாறை போலீசார், அங்குள்ள மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். உயிரிழந்தவர்கள் பெருமாள் (வயது 58) வள்ளியம்மாள் (வயது 70, சுசீந்திரன் என்ற 8 வயது சிறுவன் என அடையாளம் தெரிந்தது.

மேலும் வேன் ஓட்டுநர் உள்பட 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், விபத்தில் பலியான 3 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டிற்கு சென்றபோது விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+