200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. நெல்லையை சேர்ந்த 3 பேர் பலி..கேரளா திருமணத்திற்கு சென்றபோது சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர் விபத்தில் நெல்லையை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளது. இந்த பகுதியில் உள்ள எஸ்டேட்டில் வசித்து வரும் வரும் ஒருவருக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியை சேர்ந்த சுமார் 20 பேர் வேன் ஒன்றில் மூணாறுக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்த வேன், கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தேனி மாவட்டம் பொடிமெட்டு என்ற இடத்தில் அருகே உள்ள தோன்றிமலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. திருமன வீட்டிற்கு சென்றதால் உற்சாகமாக வேனில் இருந்தவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு தாறுமாறாக ஓடியது.
இரவு 7 மணியளவில் இருள் சூழ்ந்த நேரத்தில் சாலையோரம் இருந்த 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனுக்குள் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினர். வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த சாந்தம்பாறை போலீசார், அங்குள்ள மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். உயிரிழந்தவர்கள் பெருமாள் (வயது 58) வள்ளியம்மாள் (வயது 70, சுசீந்திரன் என்ற 8 வயது சிறுவன் என அடையாளம் தெரிந்தது.
மேலும் வேன் ஓட்டுநர் உள்பட 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், விபத்தில் பலியான 3 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டிற்கு சென்றபோது விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications