சுத்துப்போட்ட மேகம்.. அடுத்த 3 மணிநேரம் முக்கியம்! சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மிதமான மழையும், 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பல இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை என்பது கொட்டித்தீர்த்து வருகிறது. பல இடங்களில் விட்டு விட்டு மழை என்பது பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டூவீலர்களில் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் மழைக்கு ஒதுங்கிய வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணி தொடங்கி உள்ளது. தீயணைப்பு துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications