சென்னை கனமழையால் சோகம்.. மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.. மழை பெய்யும்போது ரொம்ப கவனம் மக்களே!
சென்னை: சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து, பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், மின்சாரம் தாக்கி இருவேறு பகுதிகளில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 26 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் பகுதிகளில் 15 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தியாகராய நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கே.கே. நகர் பர்னபி சாலை, அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் மழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் பலரும் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் இருக்கும் பள்ளங்கள் மற்றும் குழிகள் எங்கே இருக்கிறது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மழைக்கு இருவேறு இடங்களில் 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இந்நிலையில் மழை காரணமாக தியாகராய நகர் வாணி மஹால் பகுதியில் மின்கம்பம் அருகே ஒதுங்கிய போது மின்சாரம் தாக்கி அசாம் மாநிலத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவரது பெயர் அப்பு ஹனிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மின்கம்பத்தோடு ஒட்டிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மேற்கு மாம்பலம் பகுதியில் செல்போன் பேசியபடி சென்ற புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 23 வயது இளைஞர் துடிதுடித்து விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது செல்போன் கருகி உள்ளது. இவர் மின்னல் தாக்கி உயிரிழந்தாரா அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தியாகராய நகர் மார்க்கெட் பகுதியில் மழைநீர் இன்னும் வெளியேறாமல் தேங்கி இருக்கும் நிலையில், மின்சாரம் தாக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சாலைகளில் செல்வதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications