இடி + மின்னல்.. சென்னை உள்பட 27 மாவட்டங்களுக்கு வந்த அலர்ட்.. இன்று இரவு 10 மணி வரை கொட்டும் மழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை 3 மணிநேரத்தில் 27 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

rain weather chennai

இந்நிலையில் தான் இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.

இந்த இடங்களில் மிதமான மழையுடன் இடி, மின்னலுடன் இருக்க வாய்ப்புள்ளது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கலாம். அதேபோல் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதவிர தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+