இரவில் வெளுக்கப்போகும் மழை.. நெல்லை - குமரி உள்பட 4 மாவட்டங்களுக்கு வந்த எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் நள்ளிரவு 1 மணி வரை தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு 3 மணிநேரத்துக்கு ஒருமுறை மழை தொடர்பான எச்சரிக்கையை வழங்கி வருகிறது. அந்த வகையில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலான 3 மணிநேரத்துக்கான அலர்ட்டை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛இன்று இரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் இடி, மின்னலுடனும் மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இனி வீட்டை விட்டு வெளியே எங்காவது சென்றால் ரெயின் கோட் அல்லது குடை எடுத்து செல்வது நல்லது. மேலும் வரும் நாட்களின் மழை இன்னும் தீவிரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது தென் மேற்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் மழை தீவிரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications