அசாமை நிலைகுலைய வைத்த கனமழை.. வெள்ளத்தால் 6 லட்சம் மக்கள் பாதிப்பு! 45 பேர் பலி
திஸ்பூர்: அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் சுமார் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 30ம் தேதிதான் தொடங்கும். ஆனால் இந்த முறை மே மாதம் 30ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. கேரளம் தொடங்கி மத்திய இந்தியா வரை ஒரு கிளையாகும், மேற்கு வங்கம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை இரண்டாவது கிளையாகவும் பருவமழை மழையை கொடுக்கிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கனமழை காரணமாக அசாமில் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்திருக்கிறது. மொத்தமாக 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள நெமதிகாட்டில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதுபோல 8 ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், கச்சார், தேமாஜி, மோரிகான், உடல்குரி, திப்ருகார், டின்சுகியா, நாகோன், சிவசாகர், தர்ராங், நல்பாரி, சோனித்பூர், தவாம்பூர், கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 6,44,128 பேர் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 45 பேரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காரசிங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் புகுந்தால் பல விலங்குகள் மலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருப்பதால் நிலைமை மோசமடையாமல் பாதுகாக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியுள்ளது.
மீட்பு பணிகள் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுடன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி கூறியுள்ளதாக பிஸ்வா தெரிவித்திருக்கிறார்.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications