இயல்பை விட தாமதம்! குட்பை சொன்ன வடகிழக்கு பருவமழை.. 104 நாட்கள் நீடித்து விலகியது.. வானிலை மையம்
சென்னை: 104 நாட்களாக நீடித்து வந்த வடகிழக்கு பருவமழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் இருந்து விலகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 59 செ.மீ. மழை பெய்தது. இது, 2023 ஆம் ஆண்டு பெய்த மழையை விட 33 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு வடகிழக்கு பருவமழை மூலமே கிடைக்கும். குடிநீர் தேவை, விவாசயிகளுக்கு தேவையான நீர் ஆதாரம் என வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு பெரிதும் சார்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழையினால் தமிழகம் முழுக்கவே நல்ல மழை பெய்தது.

நெல்லை, தென்காசி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 59 செ.மீ., மழை பெய்தது. இது, 2023-ஆம் ஆண்டு பெய்த மழையை விட 33 சதவீதம் அதிகமாகும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்புக்கு மாறாக ஜனவரி மாதம் இறுதி வரை நீடித்தது. இந்த நிலையில் தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் இருந்து விலகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 நாட்கள் தாமதம்
வடகிழக்கு பருவமழையின் இயல்பான காலம் முடிந்தாலும் பருவக்காற்று மற்றும் பருவமழை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த சூழலில் தான் இன்றுடன் மழை விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பாக விலகத்தொடங்கும் நாளை விட 27 நாட்கள் தள்ளி வடகிழக்கு பருவமழை விலகியிருக்கிறது.
தமிழ்நாடு, புதுவை, கேரளா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்தில் கூட கணிசமாக பெய்தது. வழக்கமாக ஜனவரி மாதத்தில் ஒரு செ.மீட்டர் அளவுக்குதான் மழை பெய்யும் என்ற நிலையில் 2 செ.மீட்டருக்கும் அதிகமாக தமிழகம் முழுக்க சராசரியாக பெய்து இருந்தது. இது இயல்பை விட 100 சதவீதம் அதிகமாகும். வடக்கு கிழக்கு பருவக்காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு திசையில் இருந்து தென்னிந்திய பகுதிகளுக்குள் வறண்ட காற்று வீசி வருகிறது" என்று தெரிவித்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications