Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடியா? சித்திரையா? அக்னி நட்சத்திரம் யு டர்ன்.. 13 ஊர்களில் சுட்டெரித்த வெப்பம்.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதத்தில் அனல் காற்றுடன் கூடிய வெப்பம் சுட்டெரித்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சித்திரை மாத அக்னி நட்சத்திரம் ஆடி மாதத்தில் யு டர்ன் ஆகி விட்டதோ என்று நினைக்கும் வகையில் வெயில் சுட்டெரித்ததால் வீடுகளுக்குள் பலரும் முடங்கினர். இந்த மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் சுட்டெரிப்பது ஏன் என்ற காரணத்தையும் பார்க்கலாம்.

தென்மேற்கு பருவமழை: தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்க வேண்டும். நடப்பாண்டு கேரளாவில் தாமதமாகவே மழை தொடங்கியது. வட மாநிலங்களில் மழை பெய்தாலும் தமிழ்நாட்டில் பெரிதாக மழை கை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையை கடந்தது. அதன் தாக்கம் பல வாரங்களாகவே நீடிக்கிறது. பருவமழை தவறாது பெய்யும் நீர் நிலைகள் நிரம்பும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழ்நாட்டில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.

Agni Nakshatra U Turn in Aadi month Heat burning in 13 towns What is the reason?

நீர் நிலைகள்: மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரிக்கிறது. நீர் நிலைகள் வற்றத் தொடங்கிவிட்டது. நேற்றைய தினம் பல ஊர்களில் வெப்பம் சுட்டெரித்தது. தமிழகத்தில், ஓரிரு இடங்களில் அதிகபட்சம், 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும். இயல்பில் இருந்து இருந்து, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதல் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுட்டெரித்த சூரியன்: வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே நேற்று மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இது 106 டிகிரி பாரன்ஹீட் ஆகும். மதுரை நகரம், தூத்துக்குடியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடலூர், நாகை, தஞ்சாவூரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, திருத்தணி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

வெப்பநிலை உயர்வுக்கு காரணம்: பொதுவாகவே ஜோதிடத்தில் கிரகங்களின் நகர்வுக்கும் வெயில் அதிகரிப்பு, மழைக்கும் காரணம் கூறப்படும். சித்திரை மாதத்தில் செவ்வாய் கிரகமான மேஷ ராசியில் சூரியன் உச்சமடைவார். சித்திரையில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பயணம் செய்யும் போது அக்னி நட்சத்திர காலம் என்பதால் வெயில் சுட்டெரிக்கும். ஆடி மாதமான இப்போது அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதற்கு ஜோதிட ரீதியான காரணமும் கூறப்படுகிறது.

Agni Nakshatra U Turn in Aadi month Heat burning in 13 towns What is the reason?

சிம்ம ராசியில் செவ்வாய்: மேஷ ராசி அதிபதியான செவ்வாய் மற்றொரு நெருப்பு ராசியான சிம்ம ராசியில் தற்போது பயணம் செய்கிறார். சிம்ம ராசி சூரியனின் வீடு. இந்த ராசியில் உத்திரம் நட்சத்திரம் சூரியனின் நட்சத்திரம். இந்த உத்திரம் நட்சத்திரத்தில் தற்போது செவ்வாய் பகவான் பயணம் செய்கிறார். நெருப்பு கிரகம் நெருப்பு ராசியில் உள்ள சூரியனின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் பொதுவாகவே வெப்பம் அதிகரிக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். பொதுவாகவே சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தாலும் செவ்வாயின் நட்சத்திரமான மீருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் சூரியன் பயணம் செய்யும் போதும் வெப்பநிலை அதிகரிக்கும்.

பரிகாரம் என்ன: ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இணைந்து இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் உடல் சூடு தொடர்பான பிரச்சினைகள், கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே செவ்வாய் பகவானுக்கு செவ்வாய் கிழமைகளிலும் சூரிய பகவானுக்கு ஞாயிறுக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபடலாம். கோதுமை மற்றும் துவரையில் செய்த உணவுகளை அன்னதானம் செய்யலாம். வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க எலுமிச்சை ஜூஸ்,ஆரஞ்ச் ஜூஸ் குடிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+