Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தீபாவளிக்கு எங்கெங்கு மழை.. 11 மாவட்ட மக்கள் உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று முதல் 13ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைபெரியாறு அணை, வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Air pressure in the Arabian Sea Where heavy rain for Diwal says Meteorological Center warns

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றும் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடற்கரையில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 முதல் 5.8 கிமீ வரை வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலை நோக்கி நகரும் என்றும் அதன் தாக்கத்தால் கிழக்கு மத்திய அரபிக்கடலில் 8 ஆம் தேதியான நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகம், கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும், கடலோர பகுதி சீற்றத்துடன் காணப்படும் என்றும் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் 13ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+