Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளுத்து வாங்கும் மழை.. செம்பரம்பாக்கத்தில் கிடுகிடுவென உயரும் நீர்வரத்து.. சென்னை மக்களே அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. மேலும், விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சென்னையில் அடையாறு கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பபட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை எவராலும் மறந்திருக்க முடியாது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015 ஆம் ஆண்டு திடீரென இரவு நேரத்தில் நீர் திறக்கப்பட்டதால், கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை மக்கள் சந்தித்தனர்.

Alert Chennai people: Chembarambakkam water inflow increased drastically

வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நவம்பர் 29ஆம் தேதி காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இரவு 7 மணி முதல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை சுமார் 3 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்த்தது. சென்னையின் பல்வேறு பகுதியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.42 அடி தண்ணீர் உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி காலையில் விநாடிக்கு ஆயிரம் கன அடி திறக்கப்பட்ட நிலையில், மாலையில் ஆயிரத்து 500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட நீர் சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அனகாபுத்தூர் கால்வாய்கள் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதனால், அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட்து. இதேபோன்று, புழல் ஏரியில் இருந்தும் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நவம்பர் 29ஆம் தேதி காலையில் விநாடிக்கு 1,148 கன அடியாக இருந்த நீர் வரத்து, இரவில், 2,888 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், அடையாறு ஆற்றங்கரையோர சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+