தமிழகத்தில் ஜில்லுன்னு வரப்போகும் மழை.. அதுவும் எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ஆய்வாளர்கள் தகவல்
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை உக்கிரமாக வீசும் என்றும் உள்மாவட்டங்களில் 5-ந் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும் என்றும் மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் பங்குனி பிறந்தத்தில் இருந்தே உக்கிரமாக இருக்கிறது. சென்னையில் எல்லாம் மாசி மாதத்திலேயே வெயில் வேலையை காட்ட ஆரம்பித்தது. இப்போது தமிழகத்தில் சென்னையை விட மற்ற மாவட்டங்களில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கடந்த 2 வாரங்களாக இயல்பைவிட அதிகளவில் வெயில் காணப்படுகிறது.
சேலம், ஈரோடு பகுதிகளில் தான் தமிழகத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெப்பம் தமிழகத்தில் பதிவாகி தொடங்கி உள்ளது. ஈரோடு, சேலத்தில் 108, 109 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் வருகிற 30-ந் தேதி வரை இயல்பை விட வட உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதாவது, 5 முதல் 9 பாரன்ஹீட் டிகிரி வரையிலும், உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ், அதாவது, 4 பாரன்ஹீட் டிகிரி வரையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும்.
அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் பதிவாகக்கூடும். மேலும் வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), அடுத்த மாதம் (மே) 1 மற்றும் 2-ந் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை, அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
மே மாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை உக்கிரமாக வீசக்கூடும். அதன் பின்னர், உள் மாவட்டங்களில் 5-ந் தேதிக்கு பிறகு கோடை மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று வானிலை மையம் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications