அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட இந்த 13 மாவட்டங்களில் மழை இருக்கு.. வானிலை மையம் அலெர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், கடந்த 19ஆம் தேதி வட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு மழை கொட்டியது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

Chance of rain in 13 districts including Chennai in next 3 hours - Meteorological Center

வரும் ஜூன் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணப்படுகிறது. இதனால் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.

ஜூன் 27 முதல் 29 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 13 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+