இரவு 7 மணி வரை.. இடி மின்னலுடன்.. சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைக்காலம் என்பது மறந்து போகும் அளவுக்கு கடந்த இரண்டு நாட்களாக கிளைமேட் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோல் நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications