மீண்டும் ஆரம்பிக்குது? அடுத்த 2 மணி நேரம்.. கடலூர், விழுப்புரம் + 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை இன்னும் விட்டபாடில்லை. வங்க கடலில் கடந்த 25 ஆம் தேதி உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 29 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக மாறியது. தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகரத்தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை இந்த புயல் கரையை கடக்க தொடங்கியது.

ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுவை அருகே கரையை கடக்க தொடங்கியதும், பலத்த சூறைகாற்றுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. 11.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. எனினும் விழுப்புரம், கடலூர், புதுவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து இன்று வரை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூரில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மழை நீர் வடியாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் மழை எப்போது விடும், மழை வெள்ளம் எப்போது வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று இரவு 10 மணி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கோவை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கும் புதுச்சேரியிலும் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications