கனமழைக்கு ஃபுல் ஸ்டாப்.. இந்த நவம்பர் சென்னைக்கு ஆபத்தில்லை! வெதர் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில், தற்போது அதன் தீவிரம் குறைந்திருக்கிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கான வாய்ப்பு குறைந்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, இந்த நவம்பரில் சென்னை ஜஸ்ட்டு மிஸ்ஸில் தப்பியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே கனமழை குறித்த அச்சம் தொற்றிக்கொள்ளும். அதுவும் சென்னை மக்களுக்கு கேட்கவே வேண்டாம். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சொன்ன உடனேயே, மேம்பாலங்களில் கார்களை பார்க் செய்து மழையை எதிர்கொள்ள தயாராகிவிடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு நவம்பரில் இப்படியான பாதிப்பு ஏதும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி நவ.21ம் தேதி வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, "16-11-2024 மற்றும் 17-11-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18-11-2024 முதல் 21-11-2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 15-11-2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை.
மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications