ரெயின்கோட் ரெடியா? சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 2 மாதங்களாக வெப்பத்தில் தவித்த மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Chennai Chengalpattu kanchipuram districts likely to get light to moderate rain wth thunderstorm upto 10 Am today

இன்று அதிகாலையிலும் சென்னையின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இதனால் சில இடங்களில் தண்ணீங் தங்கலாம். சில இடங்களில் போக்குவரத்து என்பது பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காலையில் பணிக்கு செல்லும்போது ரெயின்கோட்டை மறக்காமல் கையுடன் எடுத்து செல்வது பாதுகாப்பானதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+