மக்களே ரெடியா.. தொடங்கியது மின்சார ரயில்.. சென்னை புறநகரில் நாளை ரயில்கள் இயங்கும்.. வந்தது மெசேஜ்
சென்னை: சென்னையில் மழைநீர் வடிந்து வரும்நிலையில், ரயில் சேவைகளும் மெல்ல மெல்ல துவங்கி வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையில் புயல் காரணமாக மொத்த சேவைகளுமே முடங்கிவிட்டன.. சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்தது.. இதில், ரயில்வே தண்டவாளங்கள் முழுவதுமே வெள்ளம் நீர் சூழ்ந்து காணப்பட்டது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பல்வேறு பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சென்னையில் புறநகர் ரயில் சேவையானது, நேற்று முன்தினம் 3ம் தேதியில் இருந்தே ரத்து செய்யப்பட்டது.

வெள்ளம்: தற்போது, வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு சென்னை மெல்ல திரும்பி வருகிறது. தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறன்றன.. முக்கியமாக, தாம்பரம், பேசின் பிரிட்ஜ், கோபால்சாமி நகர் பகுதிகளில் தண்டவாளத்தில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட நேர இடைவெளியில் சென்னையில் மின்சார ரயில்கள் சேவையும் ஆரம்பமாகி உள்ளன.. சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு வழியாக செல்லும் மின்சார ரயில்கள் நாளை முதல் இயக்கபடுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
துரித பணிகள்: அந்தவகையில், சென்னை புறநகர் ரயில்கள் இன்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.. இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரயில்கள் இயங்கும் என்று அறிவித்துள்ளது.
அதேபோல, சென்னை கடற்கரை- திருவள்ளூர்-அரக்கோணம் மார்க்கத்திலும் புறநகர் ரயில்களின் சேவை தொடங்கியிருக்கிறது. திருவொற்றியூர்-கும்மிடிப்பூண்டி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1.சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் 30 நிமிட இடைவெளியில் இயக்கம்
2.சென்னை கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் (பெரம்பூர் வழி) 30 நிமிட இடைவெளியில் இயக்கம்
3.திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி இடையே 1 மணிநேர இடைவெளியில் இயக்கம்
4.வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே 30 நிமிட இடைவெளியில் புறநகர் ரயில்கள் இயக்கம்
புதன்கிழமை (டிசம்பர்-6) அன்றும் மறுஅறிவிப்பு வரும்வரை இதே அட்டவணையில் புறநகர் ரயில் இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications