போக்கு காட்டும் டிட்வா புயல்! சென்னையில் விடாமல் கொட்டும் கனமழை.. துணை முதல்வர் ஆய்வு
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த டிட்வா புயல், தற்போது வட தமிழகத்தின் கடலோர பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் நேற்றிரவு தொடங்கி தற்போது வரை மழை நீடித்து வருகிறது. இந்நிலையில், பாதிப்புகள் குறித்தும், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியிருக்கிறது. மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்தது ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவிப்பு வாபஸ் பெற்ற பின்னர்தான் சென்னையில் மழை தொடங்கியது. அதேபோல, தற்போது மீண்டும் சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலையிலிருந்து மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது மழை ஓய்ந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications