செங்கல்பட்டு டூ டெல்டா வரை.. இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைக்கு அருகே இந்திய பெருங்கடலில் உருவான புயல், மெல்ல நகர்ந்து தமிழக கடலோர பகுதியை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இதன் காரணமாக வட மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "நாளை (நவ.28) தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் (நவ.29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications