5 நாள் மஞ்சள் அலர்ட்.. 3 நாள் வெப்பஅலை.. தமிழகத்தை வச்சி செய்யப்போகும் சூரியன்.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கடும் வெயிலுக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் மே 2, 3, 4 ஆகிய தினங்களில் வெப்பஅலை கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் வழக்கத்துக்கு மாறாக வெப்பஅலையின் தாக்கம் என்பது அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் எனக்கூறி வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான விபரம் வருமாறு:
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகமத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது தமிழக உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 49 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பிற தமிழக மாவட்டம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
மேலும் மே மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பல இடங்களில் வெப்பஅலை கடுமையாக வீசும். இதனால் 5 நாட்களுக்கு கடும் வெயிலுக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் இந்த மஞ்சள் அலர்ட் மக்களை இன்னும் வருத்தப்பட வைத்துள்ளது. இந்த மஞ்சள் அலர்ட்டை தொடர்ந்து தான் அடுத்த மாதம் கத்திரி வெயில் காலம் தொடங்குகிறது. இது இன்னும் பீதியை ஏற்படுத்துகிறது.
மேலும் அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28-29 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications