சென்னையில் மழை.. அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகுது மழை.. எங்கேன்னு பாருங்க.. வந்தாச்சு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்றைய தினம் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், தென்மாவட்டங்களிலும் மழை பெய்து கொண்டேயிருக்கிறது.

கனமழை: அந்தவகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14 மாவட்டங்களில் குறிப்பாக, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, சென்னையில் 2 நாட்களும், நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நண்பகல் மழை: இந்த பகுதிகளில் எல்லாம், இன்று நண்பகல் வரை கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற பெரும்பாலான இடங்களில், மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளதாக நேற்றைய தினமே ஆய்வு மையம் கூறியிருந்தது.

ஆனால், தற்போது மேலும் ஒரு அறிவிப்பினை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
3 மணி நேரம்: மேலும், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications