Chennai Rain: சென்னையில் சம்பவம் செய்யும் மழை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு விடாது.. 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது
சென்னை: சென்னையில் (Chennai Rain) கடந்த 3 நாட்களாக மாலை நேரத்திற்கு பிறகு மழை பெய்து வருகிறது. இரவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்றைக்கும் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போக இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றும் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரத்திற்கு பிறகு மழையும் கொட்டி வருகிறது. சென்னை, நீலகிரி, கோவை, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

சென்னை உள்பட 11 மாவட்டங்கள்
இந்த நிலையில் பகல் நேரத்தில் பல்வேறு இடங்களில் வெயில் அடித்தது. இந்த நிலையில் தான் இன்றைக்கும் இரவு நேரங்களில் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மட்டுமல்லாமல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, கரூர், மதுரை என தமிழகம் முழுக்க 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications