நாளையோட மழை முடியுது! அப்புறம் வறண்ட வானிலைதான்.. வெதர் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் நாளையுடன் மழை முடிவுக்கு வருவதாகவும், அதன் பின்னர் வறண்ட வானிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல தென்காசி மாவட்டத்தில் ஊத்து, நாலுமுக்கு காக்காச்சி, செர்வாலர் அணை, சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டத்தில் ராமநாதி அணை பிரிவு, தேனியில் பெரியகுளம் ஆகிய இடங்களில் 1 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 95 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

அதேபோல கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 3 முதல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு இன்று தொடங்கி பிப்.5ம் தேதி வரை எந்த எச்சரிக்கையும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications