"சென்னையில் இன்று கனமழை பெய்யும்.." அடுத்த வரி வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி.. அப்பாடா ரொம்ப நல்லது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை நமக்கு நல்ல மழையை கொடுத்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயலால் கனமழை கொட்டி தீர்த்தது.

 Chennai will get heavy rain today but it will be manageable says Tamil Nadu weatherman Pradeep John

அதேபோல தென்தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கடந்த மாதம் கனமழை கொட்டியது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு ஜனவரி மாதமும் ஓரளவுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது.

கனமழை: கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தே வந்துள்ளது. குறிப்பாக நேற்றிரவு முதல் சிதம்பரம், சீர்காழி பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் 22 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. கனமழையால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், இன்று சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்த நிலையில், இன்று சென்னையில் மிகக் கனமழைக்குப் பதிலாகக் கனமழையே இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாக வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "சென்னையின் தெற்கே மகாபலிபுரம் பகுதிகள் வரை மழை மேகங்கள் உள்ளன. டெல்டா முதல் செங்கல்பட்டு வரை கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், சீர்காழி என டெல்டாவின் சில பகுதிகளில் 200 மிமீ தீவிர மழையும் பெய்துள்ளது. ஆனால், சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னையைப் பொறுத்தவரை இன்று கனமழைக்குப் பெய்ய மட்டுமே வாய்ப்புள்ளது.

மழை மேகங்கள் டெல்டா முதல் பாண்டி (புதுச்சேரி) பெல்ட் வரை உள்ளன. விழுப்புரம், புதுச்சேரி முதல் திருவண்ணாமலை வரையிலான பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும். தென் சென்னை புறநகர் முதல் கிழக்கு கடற்கரைச் சாலை வரையிலான பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இருப்பினும், நகர்ப் பகுதி மழை மேகங்களைத் தவறவிட்டது. டெல்டா பகுதியின் மேலே இருந்த மழை மேகங்கள் நகர்ந்து இப்போது விழுப்புரம் மாவட்டங்களைச் சூழ்ந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் இது செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை புறநகர்ப் பகுதிகளுக்குச் சிறிது சிறிதாக நகரக் கூடும்.

நல்ல செய்தி: எனவே, சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை. . இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் வழக்கமான சமாளிக்கக்கூடிய கனமழை மட்டுமே பெய்யும். இங்கே மிக அதிக மழை பெய்யாமல் போகலாம். அதேநேரம் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகள். கள்ளக்குறிச்சி, கடலூரில் சில இடங்களில் இன்றும் கனமழை பெய்யும்.

இப்போது வரை திருவாரூர் மற்றும் சீர்காழியில் 200 மிமீ மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்திலும் சுமார் 150-200 மி.மீ மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மகாபலிபுரத்தில் 120 மி.மீ மழையும் அரியலூரில் 50-90 மி.மீ மழையும் பெய்துள்ளது.. சென்னையைப் பொறுத்தவரைத் தென் சென்னை பகுதிகளில் 50-70 மி.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரி விழுப்புரம் மற்றும் கடலூரில் இன்று நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+