வாங்க டீ சாப்பிடலாம்! நீங்க சாப்பிடலையாம்மா? தூய்மை பணியாளர்களிடம் பாசம் காட்டிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் கொட்டி வரும் மழையின் தீவிரத்தை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அது போல் அவசரகால செயல்பட்டு மையத்திலும் ஆய்வு செய்தார்.
மழையிலும் பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பார்த்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கி கொடுத்து அவர்களிடம் நலம் விசாரித்து, பாதுகாப்பாக பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.

தென் கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் முதலே கனமழை பெய்து வருகிறது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அடிஅடியென அடித்து துவைக்கும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டது. சென்னையின் பெரம்பூர், புரசைவாக்கம், புளியந்தோப்பு, மாதவரம், முடிச்சூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது.
இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளும் இருக்க முடியாத சூழல் எழுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரே நாளில் 15 செ.மீ.ருக்கு மேல் மழை பெய்துள்ளது. நாளையும் இந்த மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பலர் வீடுகளை பூட்டிக் கொண்டு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைகிறார்கள். வீடுகளில் விலை உயர்ந்த பொருட்களை உயரமான இடத்தில் வைக்கிறார்கள். அது போல் பிரட், பிஸ்கெட், உலர்ந்த உணவு பொருட்களை வாங்கி வைக்கிறார்கள். அது போல் கார்களை மேம்பாலங்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மீட்பு நடவடிக்கைகள், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அவர் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். மேலும் தனது சொந்த தொகுதியிலும் அவர் ஆய்வு செய்திருந்தார். அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அது போல் ஒரு பகுதியில் விடாத மழையிலும் தூய்மை பணி மேற்கொண்டிருந்த தூய்மை பணியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்தார்.
அவர்களுடன் சிரித்து பேசி நலம் விசாரித்தார். மேலும் பாதுகாப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார். மேலும் டீ நன்றாக இருக்கிறதா என கேட்டார். உடல்நலனை பார்த்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார். அவர்கள் அனைவரும் 77 மண்டலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். உடன் அமைச்சர் சேகர்பாபுவும் இருந்தார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications