School Leave: பள்ளிகளுக்கு அடுத்த 2 நாள் விடுமுறையா? துணை முதல்வர் உதயநிதி கொடுத்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை (அக்டோபர் 16) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து ஆலோசித்து முடிவெடுத்து இன்று மாலைக்குள் அறிவிப்பார் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பல்வேறு பகுதிளில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், நாளை, நாளை மறுநாளும் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை அக்டோபர் 16 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17 ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai rain udhayanidhi stalin

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். கோவையில் பள்ளிகள் இன்று அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்டோபர் 16) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 17) ஆகிய நாட்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல நேற்று மாலையில் இருந்து சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது.

இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அரசு தரப்பில் இதுகுறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் அனுமதிக்க வேண்டும் என நேற்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

நாளையும் நாளை மறுநாளும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மழை எச்சரிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார். இன்று மாலைக்குள் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+