கோவை டூ நெல்லை வரை.. 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், மதியத்திற்கு பிறகு ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக தலைநகர் சென்னையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நள்ளிரவு 1 மணி வரை கோவை முதல் நெல்லை வரை 6 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினம் தினம் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் சென்றாலே வியர்த்து கொட்டி வருகிறது. நேறு ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்தது.

சென்னையில் கொட்டிய மழை
இதேபோன்று இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. பகல் முழுக்க வெயில் சுட்டெரித்தது. காலையில் இருந்து மாலை வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இன்று ஒரே நாளில் வெயில் 13 இடங்களில் சதம் அடித்துள்ளது. ஆனால் மாலை நேரங்களில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில் தான் அடுத்த 3 மணி நேரம் அதாவது நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நள்ளிரவு 1 மணி வரை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1 மணி வரை நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை, தென்காசி, நெல்லை, திருப்பூர், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை.12) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவையில் கனமழை
நாளை (ஜூலை.13) மற்றும் 14ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை.15ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை.16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை.17ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications