தப்பிக்குமா சென்னை? அடித்து நொறுக்க போகும் மிக்ஜாம்.. 110 கிமீ வேகத்தில் விளாசும் சூறாவளி காற்று.!
சென்னை: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக மழை கொட்டி வரும் நிலையில் கரையைக் கடக்கும் போது அதிவேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
இப்போது மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் மழை கொட்டி வருகிறது. இப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்றிரவு முதல் தீவிர மழை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அதைச் சமாளிக்கத் தேவையான பணிகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.
பலத்த காற்று: இதற்கிடையே இந்த புயல் காரணமாகப் பலத்த காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் காலை 11.30 மணியளவில் சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
110 கிமீ வேகம்: இந்த புயல் மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு டிச. 5ஆம் தேதி இது தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடைக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து இன்று மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும்.
கடல் பகுதி: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் & தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று (03.12.2023 மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இன்று மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளைய தினம் (டிச.4) காலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 04.12.2023 மாலை முதல் 05.12.2023 நண்பகல் வரை மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும்.
கவனம் மக்களே: வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை (டிச.4) மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 05.12.2023 காலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும்.
ஒரிசா கடலோரப் பகுதிகளில் 4.12.2023 மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 05.12.2023 மாலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications