Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிக்ஜாம் புயல் எங்கு எப்போது கரையை கடக்கும்?.. சென்னையை தாக்குமா? வானிலை மையம் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது வரும் 3ஆம் தேதி புயலாக உருமாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 4ஆம் தேதி தெற்கு ஆந்திரா வட தமிழகத்தை நெருங்கும் மிக்ஜாம் புயல் 5 ஆம் தேதி நெல்லூருக்கு அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணிதுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

 Cyclone Michaung Where and when landfall? Will it hit Chennai? Met office prediction

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும். அதே சமயத்தில் வரும் 2ஆம் தேதி புயல் உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் தாமதமாக 3ஆம் தேதி உருவாகும் எனவும் நேற்று அறிவிக்கப்பட்டது.

மிக்ஜாம் (Cyclone Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியானது. இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வரும்போது கனமழை முதல் மிக கனமழை வரும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது புயலாக உருவாகி வரும் 4ஆம் தேதி சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் அறிவித்திருந்தது.

சென்னைக்கு 800 கிலோ மீட்டர் தொலைவில் புயலானது மையம் கொண்டுள்ளது. இது மெதுவாக நகர்ந்து புயலாகவே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாகவோ, அதி தீவிர புயலாகவே மாற வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது,

புயல் சின்னம் உருவானதன் காரணமாக காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும். இன்று முதல் டிசம்பர் 2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே புயல் கரையை கடக்கும் நாளும் நேரமும் மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் பிற்பகலில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயலானது டிசம்பர் 4ஆம் தேதி தெற்கு ஆந்திரா வட சென்னைக்கு அருகே நகர்ந்து வரக்கூடும் இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

புயலானது மெதுவாக நகர்ந்து டிசம்பர் 5ஆம் தேதியன்று காலையில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும் இடம் மாறினாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+