அரபிக்கடலில் உருவானது தேஜ் புயல்... தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
சென்னை: அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. இந்த புயல் தமிழகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? எப்போது எங்கு கரையைக் கடக்கும் என்று பார்க்கலாம்.
அரபிக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக மாறியுள்ளது. இது தீவிரப் புயலாக நாளை மாறி, ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே 25ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. தேஜ் புயலானது மும்பையை தாக்கக்கூடும் என்று முன்பு கூறப்பட்ட நிலையில் தற்போது புயலானது ஓமன் நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே ஏற்பட்டிருந்த அச்சம் நீக்கியுள்ளது.
இந்த புயலுக்கு பெயர் சூட்டியது நம்முடைய இந்தியாதான். தேஜ் என்றால் ஒளி, பளபளப்பான, சக்தி, புத்திசாலித்தனம், மகிமை, பாதுகாப்பு, பிரகாசமான மற்றும் பிரகாசம் என பல அர்த்தங்களை சொல்கிறது. மும்பையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள தேஜ் புயல் அதிகன மழையையும் பயங்கர சூறாவளியையும் உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேஜ் புயலினால் தமிழ்நாடு ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும்.
இதனிடையே கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை நாளைய தினம் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications