வலுவிழந்த டிட்வா.. 9 துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டுக்கு தளர்வு.. வானிலை மையம் அறிவுறுத்தல்
சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு அருகில் கடலில் நிலை கொண்டிருந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அதன்பின் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. ஆனாலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
வழக்கமாக புயல் உருவாகி கடலோரப் பகுதிகள் நோக்கி நகர்ந்து வரும் போது துறைமுகங்களில் புயல் குறித்த எச்சரிக்கைகளை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். மொத்தமாக 1 முதல் 11 எண்கள் வரையிலான எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு விளக்கம் இருக்கின்றன. அந்த வகையில் இம்முறை 4ஆம் எண் புயல் கூண்டு வரை ஏற்றப்பட்டது.
டிட்வா புயல் சென்னைக்கு 200 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த போது வலுவிழக்க தொடங்கியது. தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க தொடங்கிய நிலையில், வானிலை ஆய்வு மையம் தரப்பில் துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க அறிவுறுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications