Cyclone Michaung: புயல், வெள்ளம், மழை காலங்களில் என்ன செய்யலாம், செய்யக் கூடாது?
சென்னை: மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் போதும் நிலை கொண்டிருக்கும் போதும் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன?
1. கனத்த மழையின் போது வெளியே செல்லாதீர்கள். வீட்டுக்குள்ளேயே கவனமாக இருக்கவும். கதவு, ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைத்திருக்கவும்.

2. குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுப்பாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீர் அருகிலோ, நீர்நிலைப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
3. போதுமான அளவு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துங்கள்.
4. மேல்நிலைத் தொட்டிகளில் நீரை நிரப்பி வையுங்கள். இதனால் மழையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டால், தண்ணீருக்காக சிரமப்படத் தேவையிருக்காது.
5. எமர்ஜன்ஸி விளக்குகள், மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள். போதுமான அளவு மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் அருகிலேயே இருக்கட்டும்.
6. வெள்ளம் ஏற்படுவது குறித்த வதந்திகளை நம்பாமல், அரசு அதிகாரிகளின் முறையான அறிவிப்பைக் கேட்டபிறகே வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.
7. போக்குவரத்துக்காக இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
8. அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.
9. மக்கள் மழைக்கு ஒதுங்க வேண்டிய நேரத்தில் பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, மரங்களுக்கு அடியிலோ நிற்கக் கூடாது.
10. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களையும், வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் மழைநீர் புகாத உறையில் இட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
11. புயல் கரையைக் கடக்கும்போது வாகனத்தில் பயணிக்கூடாது. புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்.
12. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும், அதனால் புயல் கரையை கடந்துவிட்டதாக எண்ணக்கூடாது. ஏனெனில் மந்த நிலைக்குப் பின் மீண்டும் சூரைக் காற்று வீசும். புயல் கரையை கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும்.
13. புயல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களையும், பீதியையும் யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அறிவுரைகளுக்கு வானொலி தொலைக்காட்சி, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல் மற்றும் ட்விட்டரை முறையாக பார்க்கவும்.
14. அடுக்குமாடி குடியிருப்பில் வாசிப்பவர்கள் தொட்டிகளில் போதுமான நீரை தேக்கி வைத்துக் கொள்வது நல்லது.
15. மழையின் போது மின்சாரம் தடைப்பட வாய்ப்புள்ளதால் மின்விளக்கு, செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றி வைத்து கொள்ளவும்;
தேவையான மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளை வைத்திருக்கவும்.
16. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அதிகாரிகள் அறிவுறுத்தும் போது நிவாரண முகாம்களுக்கு செல்லவும்.












Click it and Unblock the Notifications