வலுவடைந்த காற்றழுத்தம்! சென்னையிலிருந்து எத்தனை கி.மீ. தொலைவில் இருக்கு தெரியுமா?
சென்னை: வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் இது சென்னைக்கு 390 கி.மீ கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
வங்கக் கடலில் தற்போது நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தற்போது சென்னைக்கு கிழக்கே 390 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகரக் கூடும்.

இதனால் டிச.25 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொருத்தமட்டில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த புயல் சின்னம் டிச.21 ஆம் தேதி நெல்லூருக்கு கிழக்கே நிலை கொண்டிருக்கும். ஆந்திர கடல் பகுதி மேல் உயரழுத்தம் இருப்பதால் புயல் சின்னம் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை. எனவே காற்றழுத்தமானது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி டிசம்பர் 22 ஆம் தேதி சென்னை அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த காற்றழுத்தமானது சென்னைக்கு 390 கி.மீ. கிழக்கு வடகிழக்கிலும் விசாகப்பட்டினத்திலிருந்து 420 கி.மீ தூரத்திலும், ஒடிஸாவின் கோபால்பூரில் இருந்து 610 கி.மீ. தொலைவிலும் நிலைக் கொண்டிருக்கிறது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில், "புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது வெள்ளிக்கிழமை வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகர்ந்தது .
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.20 ம் தேதி) முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications