வாட்டி எடுக்கும் குளிர்.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மழை இல்லை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்
சென்னை: கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ முடிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழக்தில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
நேற்று தென்தமிழகத்தில் (திருநெல்வேலி மாவட்டத்தில்) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 90 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களை பொறுத்தவரை, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 26 முதல் 28 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜன.1ம் தேதி தொடங்கி இன்று வரை அதிகபட்சமாக திருநெல்வேலயில் 22 செ.மீ அளவுக்கு மழை செய்திருக்கிறது. இது இயல்பை விட 815 சதவிகிதம் அதிகமாகும். இதனை தொடர்ந்து திருப்பத்தூரில் 355 சதவிகிதமும், திருப்பூரில் 334 சதவிகிதமும், வேலூரில் 369 சதவிகிதமும் இயல்பை விட அதிக மழை பதிவாகியுள்ளது. அதேபோல கள்ளக்குறிச்சியில் குறைந்தபட்ச மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications