6 நாள் சூரியன் சுட்டெரிக்கும்.. தகதகன்னு அறிக்கை வெளியிட்ட வானிலை மையம்! அச்சுறுத்தும் சம்மர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என்றும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்து இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம், வெப்ப நிலை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிக பட்ச வெப்ப நிலை : மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.

Dry weather will continue for the next 6 days in Tamil Nadu

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 24 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதும் இல்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+