மக்களே நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. பெங்கல் புயலால் கடலூர் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்ட மக்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்த மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது 60 கிலோமீட்டர் முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று என்பது வீச உள்ளது.

cyclone fengal weather chennai rains tamil nadu

தற்போது ஃபெங்கல் புயல் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் புயல் நாளை கரையை கடக்கும்போது சூறைக்காற்று, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த புயல் காரணமாக கடலூரில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செல்வக்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் கடலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவுரையையும் வழங்கி உள்ளார். அதன்படி நாளை பிற்பகலில் கடலூர் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளிரே வர வேண்டாம். புயல் கரையை கடக்கும்போது 60 கிலோமீட்டர் முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+