வெள்ள உபரி நீர்- தாமிரபரணி-கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தில் சோதனை ஓட்டம்-அடி தூள்!
சென்னை: கன்னடியன் அணைக்கட்டில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் பரிசோதனை அடிப்படையில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது . இந்த நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார்.
வடகிழக்குப் பருவமழை நடப்பு ஆண்டு வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை தற்போது தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முதல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. நேற்று இரவு முதல் விடாது பெய்து வரும் மழையால் தென் மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சருடனும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்தாலோசித்தார்.
இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு இந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் பணிகள் முடிந்துள்ள சூழலில், தற்போது வடகிழக்குப் பருவமழையால் தொடர் மழை பெய்து வரும் நிலையில், உபரி நீரை, இந்த சோதனை ஓட்டத்திற்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இத்திட்டத்தில் உபரிநரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடமும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்தார். இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்ட மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டார்.
இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம்செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், முதல்வர் உத்தரவையடுத்து சேரன்மாதேவி அருகே உள்ள வெள்ளங்குளி என்ற பகுதியில் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் பரிசோதனை அடிப்படையில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்பாவு கூறியதாவது: கலைஞரின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தில் வெள்ளநீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டபணி ரூ.989 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்ட சபை தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் பயன் பெறும்.
நெல்லை மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்கள், 2,657 கிணறுகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள், 2,563 கிணறுகள் என மொத்தம் 50 கிராமங்கள், 252 குளங்கள், 5,220 கிணறுகள் பயன் பெறும். விரைவில் இந்த திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்" என்றார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications