Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ்கள்.. சென்னையில் தாழ்வான பகுதியில் பஸ்களை நிறுத்தாதீங்க.. தமிழக போக்குவரத்து துறை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மழை காரணமாக, அத்தியாவசிய தேவைக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சென்னையில் மழை பெய்து வருவதால், கடுமையான அவதிக்கு ஆளாகி வருகின்றனர் பொதுமக்கள்.. இதே அளவுக்கு இன்று முழுவதும், மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது..

Government Bus and DMK Minister Sivashankar has instructed, to park the buses safely due to Chennai Rain

வானிலை மையம்: அந்தவகையில், நாளை காலை வரை மழை தொடரும் என்பதால், 25 செ.மீட்டர் அளவுக்கு கூடுதலாகவே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது..

நேற்று முதலே பலத்த மழை கொட்டி வருவதால், சென்னையே தனித்தீவு போல காணப்படுகிறது.. சாலைகளில் எல்லாம் நீர் பெருக்கெடுக்கிறது.. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. முக்கிய சாலைகள் மூழ்கியுள்ளன.. வாகனங்களுடன் பொதுமக்கள் நகரமுடியாமல் திணறி வருகிறார்கள்..

சுரங்க பாதை: ஏற்கனவே, சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது... மேலும், கடந்த 2 நாட்களாகவே பெய்த கனமழையால், கிட்டத்தட்ட 15 இடங்களில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்துள்ளன.. எனவே, அவைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பஸ் சேவைகள் பெருமளவு குறைக்கப்பட்டன.. எனினும், அத்தியாவசிய தேவைக்காக, பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.. சென்னையில் ஒரு சில இடங்களில் பஸ்கள் இயங்கினாலும் 8 மணி வரை தற்காலிகமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது..

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி முழுமையாகவே பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.. புயலின் வேகம் ஓரளவு குறைந்ததுமே, பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை அரசு பேருந்துகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது..

தமிழக அரசு: இதுகுறித்து தமிழக போக்குவரத்துஅமைச்சர் சிவசங்கர் சொல்லும்போது, "சென்னையில் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இவைகளை நேரடியாக கண்காணித்து வருகிறோம்.. சென்னையில் தாழ்வான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பேருந்துகளை பாதுகாப்பான இடங்களுக்கு இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+