அரசு பஸ்கள்.. சென்னையில் தாழ்வான பகுதியில் பஸ்களை நிறுத்தாதீங்க.. தமிழக போக்குவரத்து துறை உத்தரவு
சென்னை: சென்னையில் மழை காரணமாக, அத்தியாவசிய தேவைக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையில் மழை பெய்து வருவதால், கடுமையான அவதிக்கு ஆளாகி வருகின்றனர் பொதுமக்கள்.. இதே அளவுக்கு இன்று முழுவதும், மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது..

வானிலை மையம்: அந்தவகையில், நாளை காலை வரை மழை தொடரும் என்பதால், 25 செ.மீட்டர் அளவுக்கு கூடுதலாகவே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது..
நேற்று முதலே பலத்த மழை கொட்டி வருவதால், சென்னையே தனித்தீவு போல காணப்படுகிறது.. சாலைகளில் எல்லாம் நீர் பெருக்கெடுக்கிறது.. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. முக்கிய சாலைகள் மூழ்கியுள்ளன.. வாகனங்களுடன் பொதுமக்கள் நகரமுடியாமல் திணறி வருகிறார்கள்..
சுரங்க பாதை: ஏற்கனவே, சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது... மேலும், கடந்த 2 நாட்களாகவே பெய்த கனமழையால், கிட்டத்தட்ட 15 இடங்களில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்துள்ளன.. எனவே, அவைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பஸ் சேவைகள் பெருமளவு குறைக்கப்பட்டன.. எனினும், அத்தியாவசிய தேவைக்காக, பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.. சென்னையில் ஒரு சில இடங்களில் பஸ்கள் இயங்கினாலும் 8 மணி வரை தற்காலிகமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது..
திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி முழுமையாகவே பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.. புயலின் வேகம் ஓரளவு குறைந்ததுமே, பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை அரசு பேருந்துகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது..
தமிழக அரசு: இதுகுறித்து தமிழக போக்குவரத்துஅமைச்சர் சிவசங்கர் சொல்லும்போது, "சென்னையில் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இவைகளை நேரடியாக கண்காணித்து வருகிறோம்.. சென்னையில் தாழ்வான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பேருந்துகளை பாதுகாப்பான இடங்களுக்கு இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications