சிவகங்கை, மதுரை தான் டார்கெட்.. சுத்து போட்ட மெகா சைஸ் ‘ஆரஞ்ச்’.! 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரை மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஏப்ரல் - மே மாதங்களுக்கு இணையாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து மழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தினமும் மழை பெய்து வருகிறது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை தினமும் ஒருமுறையாவது மழை பெய்கிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதே நேரத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி,திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 33 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணித்திருக்கிறது. இதே போல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை (அக். 12) வளிமண்டல சுழற்சி உருவாகிறது எனவும், வளிமண்டல சுழற்சி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் எனவும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கான மழை அதிகரிக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பொதுவாக டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் அதிக கன மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு அதனை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாகவே அக்டோபர் 15ஆம் தேதி சென்னைக்கு கனமழை பாதிப்பு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறது.
மேலும் அந்த தேதியில் சென்னையில் மட்டும் 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications