Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயற்கை நினைத்தால் ஒரு நாள் போதும்... நெஞ்சை பதற வைக்கும் வீடியோக்கள்.. நகரமே என்ன ஆனதுன்னு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஹல்துவானி நகரமே வெள்ளக்கடாக காட்சி அளிக்கிறது. ஒரு நகரத்தை இயற்கையால் ஒன்றுமே இல்லாமல் செய்தவிட முடியும் என்கிற அளவிற்கு வெள்ளத்தின் காட்சிகள் உள்ளன. கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இந்த காட்சிகள் இமயமலையின் அழகிற்கு பின் உள்ள ஆபத்தை காட்டுகிறது.

அண்மையில் 2018 என்ற மலையாள படத்தை ஒடிடியில் பார்த்த போது, இடுக்கி அணையை திறந்துவிட்ட போது, விடாமல் பெய்த மழையால் கேரளாவில் கொச்சி, ஆலப்புழா மற்றும் இடுக்கி, கோட்டாயம் உள்ளிட்ட பகுதிகளில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டதை உணர முடிந்தது.

Heavy rain causes floods in Uttrakhands Haldwani, rescue operation underway, see the videos

2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினையும் நாம் மறக்கவே முடியாது. அதீத மழையும், அதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரும் எத்தனை மக்களை அழித்தது என்பதை கண் முன்னே பார்த்ததால், அதீத மழை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து பயம் உடனே வந்துவிடுகிறது.

இமயலை பகுதியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துள்ள அதீத கனமழையால் ஆறுகளில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டில் ஹல்துவானி என்ற நகரில் வீடுகள், கடைகள், சாலைகள் என எல்லா இடங்களிலும் மழை நீர் தேங்கி உள்ளது.. இல்லை இல்லை தவறு,.. மழை நீர் தேங்கவில்லை. வெள்ளமாக பாய்ந்து ஓடுகிறது.. பல வீடுகளை வெள்ளம் அந்த மக்களின் கண் முன்னே அழித்து சென்றுள்ளது.

பல மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர்.. வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஹல்துவானி நகரில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல.. சாலைகளின் போக்கையே திசை மாற்றி உள்ளது. பாதைகளை மாற்றி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுவதை பார்க்கும் போது.. இயற்கையால் ஒரு நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்பதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.

சாலைகளில் கார்களை அடித்து செல்லும் வெள்ள நீர் காட்சிகள் வெளியாகி உள்ளது. சில இடங்களில் மிக ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களில் மக்கள் வெள்ளத்தில் செல்கிறார்கள். ஒரு காட்சியில் சாலைகள் எல்லாமே வெள்ளத்தில் மிதக்கிறது. இப்படி பல காட்சிகள் உத்தரகாண்ட் மக்களால் எடுக்கப்பட்டு ட்விட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் எல்லாம் நிச்சயம் காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+