ராமநாதபுரம் டூ குமரி வரை.. 5 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுக்க மிதமான மழை பரவலாக பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் நவம்பர் முதல் இரு வாரத்தில் பெரிய மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில், தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும்.
இதேபோல் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு அதாவது 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 17 ஆம் தேதி செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
18 ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும். 15 ஆம் தேதிக்கு பிறகு பருவமழை தீவிரமடையும் என கூறப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாட்களில் வளிமண்டல சுழற்சிகள், காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications