படபடன்னு கொட்ட போகுது மழை.. அரபிக்கடலில் மீண்டும் "பூதம்".. வறண்ட வானிலை + உறைபனிக்கு நடுவே வார்னிங்
சென்னை: வறண்ட வானிலை ஆங்காங்கே நிலவி கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பலத்த மழையை தந்துவிட்டு போனது.. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர மற்ற அனைத்து நீர் நிலைகளும், மழைப்பொழிவால் நிரம்பிவிட்டன...

அதிலும் தென் மாவட்டங்களிலும் மழைக்கு பஞ்சமேயில்லாமல் அடித்து ஊற்றியது.. ஒருகட்டத்தில், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பாதிப்புகளை தந்து விட்டு போனது. தற்போது, வடகிழக்கு பருவமழை மெல்ல விடை பெற்று கொண்டிருக்கிறது.
வறண்ட வானிலை: எனவே, வறண்ட வானிலை தமிழ்நாட்டில் எட்டிப்பார்க்க துவங்கி உள்ளது.. அதேசமயம், பெரும்பாலான மாவட்டங்களில் கடும் குளிரும், பனி மூட்டம் நிலவுகிறது... நீலகிரியில் மைனஸ் டிகிரிக்கு உறைப்பனி போய்விட்டது. இப்படியே போனால், மைனஸ் டிகிரிக்கு கீழே போகவும் வாய்ப்பிருப்பாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். எப்படியும், நீலகிரியில் வரும் மார்ச் முதல்வாரம் வரை இந்த பனி நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், மேலும் சில மாவ5 மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. நேற்றுகூட, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
டெல்டா மாவட்டம்: இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதால், அடுத்த 2 நாட்களுக்கு, அதாவது இன்றும், நாளையும் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வானிலை மையம்: நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனுடன் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications